ஆஸ்திரேலியாவுக்கு பயம் வந்து விட்டது: ஹர்பஜன்
சிட்னி: இனிமேலும் நாம் அசைக்க முடியாத சாம்பியன் இல்லை என்ற பயம் ஆஸ்திரேலியாவுக்கு வந்து விட்டது. அந்த விரக்தியில்தான் இந்திய வீரர்களை அவர்கள் திட்ட ஆரம்பித்துள்ளனர் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
மாத்யூ ஹெய்டன் தன்னை விஷ களை என்று கூறியிருப்பது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவிக்கையில், இனிமேலும் கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அணி, சாம்பியனாக ஆஸ்திரேலியாவால் இருக்க முடியாது என்ற எண்ணம் அவர்களுக்கு வந்து விட்டது. அதன் விளைவாகத்தான், அந்த விரக்தியின் வெளிப்பாடுதான் இந்த பேச்சுக்கள், ஏச்சுக்கள் எல்லாம்.
தங்களுக்கு ஒரே போட்டி இந்தியாதான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியா மட்டுமே நமக்கு பெரும் நெருக்கடி கொடுக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்துள்ளனர். எனவேதான் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
தலையில் உள்ள கிரீடம் நழுவ ஆரம்பித்திருப்பதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இல்லாவிட்டால் 19 வயது இளம் வீரரைப் (இஷாந்த் சர்மா) பார்த்து, மிகப் பெரிய கிரிக்கெட் ஜாம்பவான் (மாத்யூ ஹெய்டன்) பாக்ஸிங் பண்ணலாம் வர்றியா என்று கேட்பாரா?
ஹெய்டன் பேச்சுக்குப் பதில் பேச்சு பேச நான் தயாராக இல்லை. அந்த சண்டையில் சேர நான் விரும்பவில்லை. இந்த ஆட்டத்துக்கு நான் தயாராக இல்லை.
இவர்கள் (ஆஸ்திரேலியர்கள்) என்ன பேசுகிறார்கள், எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களும், அணிகளும் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் சிங்.