தண்ணீர் பாய்ச்சும் தகராறு-தம்பியை கொன்ற அண்ணன்
நெல்லை: நெல்லை மாவட்டம் சிவகிரி குமராபுரம் பாலசுப்பிரமணியபுரம் சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பெரிய சன்னாசி. இவரது பக்கத்து வீட்டில் தம்பி சின்ன சன்னாசி வசித்து வந்தார்.
அண்ணன் தம்பி இருவருக்கும் சண்முகநேரி கண்வாய் அருகே தனிதனியாக வயல்கள் உள்ளன.
இங்குள்ள பொதுக் கிணற்றில் இருவரும் முறை வைத்து தண்ணீர் பாய்ச்சி வந்தனர். இதில் அவர்களிடேயே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
நேற்று மாலை சின்ன சன்னாசி தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெரிய சன்னாசிக்கும், அவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பெரிய சன்னாசி அரிவாளால் சின்ன சன்னாசியை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது வலது மணிக்கட்டு துண்டாகி விழுந்தது.
தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுபட்ட சின்னசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சிவகிரி இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய பெரிய சன்னாசியை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications