கேரளாவுக்கு இடம் மாறிய புலிகள்: 'காரணம்-நானும் ஜெவும்'

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொச்சியில் புலிகளுக்காக கட்டப்பட்டு வந்த படகு கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்து கேரளத்தின் கொச்சி, திருவனந்தபுரம், கன்னூர் ஆகிய பகுதிகளுக்கு விடுதலைப் புலிகள் தங்களது தளத்தை மாற்றிவிட்டது தெரிகிறது.
இதற்கு நானும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் புலிகளுக்கு எதிராக நடத்திய இயக்கமே காரணம்.
யாழ்பாணத்தில் இருந்து கேரளத்துக்கு எளிதாக வந்துவிடலாம் என்பதற்காக சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்றுமாறு தங்களுக்கு மிக நெருக்கமான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை புலிகள் நெருக்கி வருகிறார்கள்.
இதனால் தான் இந்த திட்டத்துக்கு கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அப்படியே திமுக அரசையும் கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுவாமி.












Click it and Unblock the Notifications