கூந்தன்குளத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
நெல்லை: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து குவிந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கலுக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் உள்ள சரணாலயம் குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதவாக்கில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குவிகின்றன.
சைபீரியா, நைஜீரியா. ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்த பறவைகள் வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை தாமதம் காரணமாக பிப்ரவரி மாத இறுதியில்தான் பறவைகள் வரத்து தொடங்கியது. கடந்த இரு நாட்களாக அதிக அளவில் பறவைகள் வந்துள்ளன.
கூந்தன்குளம் கிராமத்தை ஒட்டிய ஏரியில் உள்ள கருவேல மரங்களிலும், வீடுகளைச் சுற்றியுள்ள மரங்களிலும், பறவைகள் கூடுகட்டி அவற்றில் முட்டையிட்டு குஞசு பொறிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்து பறக்கும தருவாயில் தங்கள் தாயகத்துக்கு அழைத்து செல்கின்றன
பல தலைமுறையாக அந்த கிராமத்து மக்கள் காட்டும் பிரியமும், சுற்றுப்பகுதி குளங்களில் கிடைக்கும் தாராளமான உணவுமே பறவைகள் இங்கு அதிக அளவில் வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போதுகூட பறவைகளை அச்சுறுத்தும் பட்டாசுகள் மற்றும் வெடிப்பொருள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பறவைகளை சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் பார்வையிட வசதியாக வனத்துறையினரால் உயர்ந்த கோபுரமும், பைனாகுலர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பறவைகள் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக இங்கு தங்குமிடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications