நடிகை-இன்ஸ்பெக்டர் மீது பெண் பண மோசடி புகார்
சென்னை: நடிகை மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதும் ஒரு பெண் பண மோசடி புகார் தந்துள்ளார்.
சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வசந்த ராணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.
தனியே வசித்து வரும் வசந்த ராணி போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனு தந்துள்ளார். அதில்,
எனது கணவரின் உறவுக்காரரான இன்ஸ்பெக்டர் ராஜேந்திர குமார், அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது புதிதாக தொழில் தொடங்க என்னிடம் ரூ.55,000 கடன் வாங்கினார். அதை வைத்து மென்ஸ்பவர்' என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
தற்போது கடலோர காவல் படைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
இதற்கிடையே அவரது தோழியும் காதல்' படத்தில் சந்தியாவுக்கு சித்தியாக நடித்தவருமான நடிகை கவுசல்யா சுப்பிரமணியத்திற்கு தொழில் தொடங்குவதற்கு என்னிடம் ரூ.50,000 கடன் வாங்கித் தந்தார்.
ஆனால், வாங்கிய பணத்தை திருப்பித் தர மறுக்கிறார். ல்போனுக்கு தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப்' செய்து விடுகிறார். அவர் குடும்பத்தினருடன் தி.நகரில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
எனவே ராஜேந்திரகுமார் மீதும் நடிகை கவுசல்யா சுப்பிரமணியம், மீதும் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார் வசந்தி.