அத்வானியைக் கொல்ல லஷ்கர் இ தொய்பா சதி
டெல்லி: பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானியைக் கொல்ல லஷ்கர் இ தொய்பா திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
சமீபத்தில் அத்வானியைக் கொல்ல பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டது.
உ.பி மாநிலம் ராம்பூருக்கு அத்வானி செல்லும்போது, அவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அத்வானியை நேரில் சந்தித்துத் தெரிவித்தார்.
இதையடுத்து தனது ராம்பூர் பயணத்தை அத்வானி ரத்து செய்தார். இந்த நிலையில் அத்வானிக்கு கொலை மிரட்டல் இருப்பதாக மீண்டும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
அத்வானியின் சுற்றுப்பயணத்தில் குளறுபடிகளை ஏற்படுத்தி, அவரைக் கொலை செய்ய லஷ்கர் அமைப்பு திட்டமிட்டுள்ளது. மனு கொடுப்பவர்கள் போல, பத்திரிக்கையாளர்கள் போல, கட்சியினர் போல நடித்து இந்தக் கொலை திட்டத்தை செயல்படுத்த லஷ்கர் தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பாஜகவை மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்த சதியைத் தொடர்ந்து அத்வானியின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications