For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய நுண்ணுயிரியல் கழக தலைவராக மதுரை பேராசிரியர் நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பி.குணசேகரன், இந்திய நுண்ணுயிரியல் கழகத்தின் (ஏ.எம்.ஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒரு ஆண்டுக்கு இப்பதவியை அவர் வகிப்பார். நுண்ணுயிரியல் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைப்பு ஏ.எம்.ஐ.

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறும் ஏ.எம்.ஐ அமைப்பின் 50வது வருடாந்திர மாநாட்டுக்கு பேராசிரியர் குணசேகரன் தலைமை தாங்குவார்.

பேராசிரியர் குணசேகரன் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ஜீனோமிக் அறிவியல் மைய ஆய்வுத் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும், எம்.எஸ்சி (ஜீனோமிக்ஸ்) வகுப்புக்கான ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

ராஜேந்திரனுக்கு இளம் விஞ்ஞானி விருது:

இதற்கிடையே, ஏ.எம்.ஐ வழங்கும் இளம் விஞ்ஞானி விருது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவியாளர் ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது.

ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் இந்த விருதினை ஏஎம்ஐ வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதினை ஜீனோமிக்ஸ் அறிவியல் பிரிவில் ஆராய்ச்சி உதவியாளராக இருக்கும் ராஜேந்திரன் பெற்றுள்ளார்.

பேராசிரியர் குணசேகரின் வழிகாட்டுதலின் கீழ், தொழிலக நுண்ணுயிரியல் குறித்த ஆராய்ச்சியில் ராஜேந்திரன் ஈடுபட்டார். அவரது ஆராய்ச்சி முடிவுகளைப் பாராட்டும் விதமாக தற்போது அவருக்கு ஏஎம்ஐயின் இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X