ஆயுத உதவி கோர சீனா செல்கிறார் ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் சீனா செல்லவுள்ளதாக தெரிகிறது.
அடுத்த வார மத்தியில் 2 நாள் பயணமாக சீனா செல்கிறார் ராஜபக்சே. இரு தரப்பு உறவுகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து இந்த பயணத்தின்போது சீன தலைவர்களுடன் ராஜபக்சே பேசுவார் என்று தெரிகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை இலங்கை படையினர் அதிகப்படுத்தி வருகின்றனர். இந்தியாவிடம் ஆயுத உதவி கேட்டும், அது கிடைக்காததால் சீனா, பாகிஸ்தானின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
இந்த நிலையில், தனது சீன பயணத்தின்போது, இலங்கைக்கு ஆயுத உதவி செய்யுமாறும் ராஜபக்சே சீன தலைவர்களிடம் கோரிக்கை வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications