மகேந்திரகிரி மலையி்ல் புலிகள் நடமாட்டம்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் களக்காடு- முண்டன்துறை புலிகள் சரணாலயத்துடன் இணைக்கவேண்டும் என்று வனத்துறையினர் கோரியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் முண்டன்துறை மலை பகுதிகளை இணைத்து புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலாயத்தில் புலிகள், சிறுத்தைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந்த சரணாலயத்தை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் கோதையாறு மலைப்பகுதியில் உள்ள சுமார் 700 ஏக்கர் நிலம் இத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் அருகில் உள்ள, மகேந்திரகிரி மலை மற்றும் சிவகாமிபுரம் மலைப் பகுதிகளிலும் சிறுத்தை மற்றும் புலிகளின் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5000 ஏக்கர் கொண்ட மகேந்திரகிரி மலை மற்றும் அதன் சுற்றுப்பகுதியை புலிகள் சரணாலயத்துடன் இணைக்க அதிகாரிகள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications