For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே 1 முதல் திபெத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

Tibet Child
பெய்ஜிங்: திபெத்துக்குள் கடந்த 6 வாரமாக வெளிநாட்டினரை உள்ளே விடாமல் தடுத்து வந்த சீன அரசு, மே 1ம் முதல் வெளிநாட்டினர் திபெத் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவித்துள்ளது.

சீனாவை எதிர்த்து திபெத்தியர்கள் மிகக் கடுமையாக போராடி வருகின்றனர். தலைநகர் லாசாவில் நடந்த எழுச்சி மிகு போராட்டத்தை ஒடுக்க சீன பாதுகாப்புப் படையினர் எடுத்த அடக்குமுறை நடவடிக்கையால், பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தொடர்ந்து திபெத்தில் மோதல் நிலவி வருகிறது. இதுதவிர உலகெங்கும் உள்ள திபெத்தியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் திபெத்துக்கு போவதற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் சீன அரசு தடை விதித்தது. இதனால் அங்கு சுற்றுலா கடுமையாக பாதித்தது.

கடந்த மார்ச் 16ம் தேதி முதல் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் கலவரத்தின்போது திபெத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகள் சாட்சி கூறியதும் இதற்கு காரணமாகும்.

ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்கின்றனர் ஓட்டல், கடை உரிமையாளர்களும், ஏஜென்டுகளும்.

இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டு பயணிகளுக்கு மே 1 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லாசா கலவரம் சுற்றுலா பயணிகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், திபெத்தின் மலை மற்றும் இயற்கை காட்சிகள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் என்கிறது சுற்றுலாத் துறை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X