கெளஹாத்தியில் சன் டிவியின் எஸ்.எப்எம் நிலையம் தொடக்கம்
இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய டிவி கட்டமைப்பான சன் டிவியின் சார்பில் நாடு முழுவதும் எப்எம் ரேடியோ நிலையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சூரியன் எப்.எம். என்ற பெயரிலும், பிற மாநிலங்களில் எஸ் எப்.எம் என்ற பெயரிலும் இவை தொடங்கப்பட்டு வருகின்றன.
தற்போது அஸ்ஸாமின் கெளஹாத்தியில் தெற்காசிய எப்எம் நிறுவனத்துடன் இணைந்து எஸ் எப்.எம் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. கெளஹாத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் இந்த வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ முடியும்.
சன் டிவி குழுமத்திடம் 45 எப்எம் ரேடியோ நிலையங்களைத் தொடங்க உரிமம் உள்ளது. தற்போது தொடங்கப்பட்டுள்ள கெளஹாத்தி எப்எம் நிலையம் சன் குழுமத்தின் 29வது நிலையமாகும்.
ஏற்கனவே சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, விசாகப்பட்டனம், பெங்களூர், ஹைதராபாத், ஜெய்பப்பூர், புவனேஸ்வர், திருப்பதி, லக்னோ, போபால், புதுச்சேரி, கோழிக்கோடு, இந்தூர், விஜயவாடா, வாரணாசி, ராஜமுந்திரி, கான்பூர், திருவனந்தபுரம், திருச்சூர், மங்களூர், கண்ணூர், அலகாபாத், ஜபல்பூர், மைசூர் ஆகிய நிலையங்களில் சன் குழுமத்தின் எப்.எம் நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.