மான்யதாவுடன் திருமணம் ஆகவில்லை-சஞ்சய் தத்
இரண்டு முறை திருமணம் செய்து கொண்டு, அந்த வாழ்க்கையில் தோல்வி அடைந்த சஞ்சய் தத் நீண்ட காலமாக காதலித்து வந்த, ஏற்கனவே கல்யாணமாகி, கணவரை விட்டுப் பிரிந்திருந்த மான்யதாவை கோவாவில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார்.
இதுதொடர்பாக கோவா பதிவாளர் அலுவலகத்திலும் அவர்கள் திருமணப் பதிவுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் மான்யதா கொடுத்த முகவரி போலியானது என்று திருமணத்தைப் பதிவு செய்ய கோவா பதிவாளர் அலுவலகம் மறுத்து விட்டது.
இந்த நிலையில் மான்யதாவின் முதல் கணவரான மெஹ்ராஜ் ஷேக் மும்பை பந்த்ரா கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கும், மான்யதாவுக்கும் இன்னும் சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. இந்த நிலையில் அவரை சஞ்சய் தத் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி தவறு என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் சஞ்சய் தத், மான்யதாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக மும்பை கோர்ட்டில் சஞ்சய் தத் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், எனக்கும், மான்யதாவுக்கும் சட்டப்படி கல்யாணம் ஆகவில்லை என்றும், அதற்கான சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் சஞ்சய் தத் வழக்கில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications