For Daily Alerts
Just In
சித்திரை பிறப்பு: சாய்பாபாவிடம் ரஜினி ஆசி!
வழக்கமாக சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் அதை தமிழக அரசு மாற்றி தை முதல் நாளை புத்தாண்டாக அறிவித்துள்ளது.
இருப்பினும் தமிழகம் முழுவதும் மக்கள் கோவில்களுக்குச் சென்று வழக்கமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று காலை 7.30 மணிக்கு புட்டபர்த்தியில் உள்ள பிரஷாந்தி நிலையத்திற்கு வந்தார். அங்குள்ள குல்வந்த் ஹாலில் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தார். பின்னர் சாய் பாபாவிடம் அவர் ஆசி பெற்றார்.
பின்னர் ஆரத்தி நிகழ்ச்சியை காண்பதற்காக மற்ற பக்தர்களோடு அவரும் காத்திருந்தார். காலை ஒன்பதரை மணியளவில் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. அதை ரஜினி பக்திப் பரவசத்துடன் கண்டு வணங்கினார்.
Comments
Story first published: Monday, April 14, 2008, 14:27 [IST]