மதுரை சிறையிலிருந்து புழல் சிறைக்கு ஹைதர் அலி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: 44 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அல் உம்மாவைச் சேர்ந்த ஹைதர் அலி மதுரையிலிருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அல் உம்மா அமைப்பைச் ேசர்ந்தவர் இமாம் அலி. இவரது கூட்டாளி ஹைதர் அலி. பெங்களூரில் நடந்த என்கெளன்டரில் இமாம் அலி கொல்லப்பட்டு விட்டார்.
வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக கோவில்பட்டி கோர்ட்டில் நடந்த வழக்கில், ஹைதர் அலிக்கு 44 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்பு அவர் சென்னை மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கோவில்பட்டி வழக்கு விசாரணைக்காக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். தற்போது அந்த விசாரணை முடிவடைந்து விட்டதால் மீண்டும் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications