டாக்டர் ஸ்டிரைக்கால் அவலம் - டாக்சியில் பிரசவித்த பெண்
மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து வரும் டாக்டர்கள் ஸ்டிரைக்கால், பிரசவம் பார்க்க டாக்டர்கள் முன்வராததால், டாக்சியிலேயே ஒரு பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களும், மருத்துவ மாணவர்களும் கடந்த 5 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமா பனோ என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு பாபா அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டார். ஸ்டிரைக் நடப்பதால் பிரசவம் பார்க்க டாக்டர்கள் மறுத்துவிட்டனர். மேலும் சீமாவின் நிலை மோசமாக இருந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினார்.
இதையடுத்து பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த சீமாவை தனியார் மருத்துவமனைக்கு டாக்சியில் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வலியால் துடித்த சீமாவுக்கு டாக்சியிலேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications