தமிழகத்தில் 1.6 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி ரேஷன் கார்டுகளில் 35 லட்சம் ரேஷன் கார்டுகள் போலி என்று எல்காட் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,979 போலி கார்டுகள் உள்ளன.
இதை கண்டுபிடிக்கும்போது நியாயமாக கார்டு வைத்திருப்போரும் பாதிப்பார்களே. இந்த பணியில் ஈடுபடுத்தப்படும் 286 பணியாளர்களை வைத்து எப்படி போலி கார்டுகளை கண்டுபிடிப்பீர்கள். போலி கார்களை தடு்க்க பெருவிரல் ரேகையை அடையாளமாக பதிய வைத்து கொடுக்க முடியுமா என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் வேலு, கடந்த மார்ச் 31 வரை தமிழ் நாட்டில் 1 கோடியே 97 லட்சத்து 47,517 கார்டுகள் உள்ளன. கடந்த 2004-05ல் விடுபட்டவர்களுக்கு 36.59 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. 2வது கட்டமாக மேல்முறையீட்டு மனுக்கள் மீது 2.93 லட்சம் கார்டுகள் வழங்கப்பட்டன.
2005ல் 1.49 கோடி கார்டுகள் புதுப்பிக்கப்பட்டன. இவை எல்லாம் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டிருந்தன.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் இவற்றையெல்லாம் சாப்ட்வேர் மூலம் ஒருங்கிணைத்தோம். அப்போது ஒரே எண்ணில் பல அட்டைகள் இருப்பதும், ஒரே குடும்பத்தில் 4, 5 அட்டைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
34 லட்சத்து 51,312 கார்டுகள் போலி ரேஷன் கார்டு இருப்பதி தெரிய வந்தது. தாலுகா வாரியாக தனித்தனி சி.டி.க்களாக பிரித்து முகவரி எடுக்கப்பட்டது. அதை வைத்து வீடு வீடாக சோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.
கடந்த 11ம் தேதி வரை 30,05,217 வீடுகளில் சோதனை செய்ததில் 69,770 போலி கார்டுகளை கண்டுபிடித்து நீக்கினோம். கடைகளில் நடந்த விசாரணையில் 96,520 அட்டைகள் போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,66,290 போலி கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அரசுக்கு 33.25 கோடி மிச்சமானது. எல்காட் நிறுவனம் கண்டுபிடித்த அத்தனையும் போலி என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் 3 கோடி போலி ரேஷன் கார்டுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் சமீபத்தில் கூறி இருந்தார். இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
பரிசோதனை முறையில் இரண்டு இரண்டு மாவட்டங்களாக ஆய்வுக்கு எடுத்து முழுமையாக போலி அட்டைகளைக் களைய ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு புதிய ரேஷன் கார்டுகள் கொடுக்க வேண்டிய பணியும் உள்ளது. எனவே இதில் போலியான ரேஷன் கார்டுகள் வராத அளவுக்கு கை ரேகைகளை பதிவு செய்யலாமா அதைவிட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரேஷன் கார்டுகளை வழங்கலாமா என்பது முடிவு செய்யப்படும்.
போலி அட்டைகளை வழங்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது என்றார் வேலு.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications