பழனி உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டியது
பழநி: பழனி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.21 கோடியை தாண்டியது. இது கடந்த ஒரு மாத காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அறுபடை வீடுகளில் ஒன்று பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலாகும். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பழநிக்கு வருவது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவார்கள்
கடந்த மாதத்தைத் தொடர்ந்து இந்த மாதமும் உண்டியல் திறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
மொத்தம் 1 கோடியே 21 லட்சத்து 99,612 ரூபாய் வசூலாகியுள்ளது. வெள்ளி 7,205 கிராம் இருந்தது. தங்கத்தாலான வேல், திரிசூலம், நாணயங்கள் போன்ற பல காணிக்கைகள் இருந்தன. ஒரு மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.