குற்றாலத்தில் தென்றல் காற்று - சுற்றுலா பயணிகள் குஷி
தென்காசி: குற்றாலத்தில் தென்றல் காற்று வீச துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக குற்றாலத்தில் ஜூன் மாதம் சீசன் துவங்கும். கோடை வெயிலின் உச்சத்தில் இருக்கும் மே மாதத்தில், சீசன் காற்று வீச துவங்கிவிடும். அதனால் கோடை வெயிலின் தாக்கம் இருக்காது.
இந்த ஆண்டு பருவ நிலை மாறி மழை பெய்து வருவதால் சீசன் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சம் நிலவியது. இதற்கு ஏற்றார்போல் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நிலைமை மாறியுள்ளது. பகல் நேரத்தில் வெயில் இருந்தாலும் இதமான காற்று வீசியது. இதில் வெயிலின் கொடுமை சற்று தணிந்து காணப்பட்டது. குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் தென்றல் காற்று வீசுவது வழக்கம்.
குற்றாலத்தில் பனிதுளி போன்ற லேசான சாரல் பெய்தது. தென்றல் காற்று வீச துவங்கியதால் விரைவில் குற்றாலத்தில் சீசன் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications