அப்பாவிகளை கைது செய்வதா?-இன்ஸ்பெக்டருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
மதுரை: அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடந்த 1999 ம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பாக 152 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறுமுகம், முத்து ஆகியோருக்கு பதிலாக முருகன், முத்து ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து விசாரித்தார். அப்போது, வழக்கில் தொடர்பு இல்லாத இருவரை கைது செய்து சிறையில் அடைத்தது சட்ட விரோதம். இது மனித உரிமையை மீறிய செயல். அப்பாவிகள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்த போலீஸ் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இந்த வழக்கில் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் குளித்தலை இன்ஸ்பெக்டர் முருகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ஜாமீன் கோரிய முருகன், முத்துவை உடனே விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மனித உரிமையை பறிக்கும் போலீசாருக்கு எதிராக நீதிமன்றம் சாட்டையை சுழற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications