தேர்தல் சந்திக்க கருணாநிதி தயாரா?-சரத் சவால்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான அவர் நாகர்கோவிலில் நடந்த தனது கட்சியின் பேரணியில் பேசுகையில்,
தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பாமக தொடர்ந்து முட்டுக் கட்டையாக இருப்பதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர் போல தானே கேள்வியும் கேட்டு தானே பதிலும் சொல்லியிருக்கிறார்.
இது போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஏன் ஆட்சியில் தொடர வேண்டும். ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க கருணாநிதி தயாரா?.
டி.ஆர்.பாலு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது குடும்ப நிறுவனங்களுக்கு அரசு கேஸ் சப்ளை பெற முயன்ற விவகாரத்தில் கருணாநிதி ஏன் ஆழ்ந்த மெளனம் காத்து வருகிறார்.
முதல்வர் பதவிக்காக நான் அரசியலுக்கு வந்ததாக அமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஸ்டாலின் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பதை சொல்ல முடியுமா?.
திரைப்படங்களில் நடிகர்கள் புகை பிடிப்பது போல நடிக்கக் கூடாது என அறிவுரை கூறும் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சிகரெட்-பீடி தயாரிப்புக்கு தடை போட ஏன் முயற்சி செய்யவில்லை என்றார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications