For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜவ்வாது மலை அருவியில் சிக்கி சிறுவன், சிறுமி பலி

By Staff
Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அருவியில் குளித்த சிறுவனும், சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (37). இவரும், இவரது தோழிகள் ரமாதேவி (37), மாலா (32), ரேவதி (41) ஆகியோர் ஜவ்வாது மலைக்கு சுற்றுலா சென்றனர்.

இவர்களுடன் ரமாதேவியின் மகன்கள் கிரீஸ் (12), கவுதம் (11), மாலாவின் மகன்கள் ரமணன் (14), கோவர்த்தனம் (12), மகள் அபிதா (10), சரஸ்வதியின் மகன் சரத்குமார் (14), உறவினர் விஜயலட்சுமி ஆகியோரும் சென்று இருந்தனர். ஜவ்வாது மலை சென்ற இவர்கள் அனைவரும் அங்குள்ள அருவியில் குளித்தனர்.

அப்போது கால் தவறி சிறுமி விஜயலட்சுமி அருவி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விட்டார். அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த சிறுவன் சரத்குமார் விஜயலட்சுமியை காப்பாற்ற அந்த பள்ளத்தில் குதித்தான். அவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தனர்.

தகவல் அறிந்ததும் ஜவ்வாது மலையில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X