கும்பகோணம்-வீட்டில் தனியே இருந்த பெண் மானபங்கம்!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் எலுமிச்சாங்காபாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
வீட்டில் ராணி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்நதவர் ரவிசந்திரன் (35). எவர்சில்வர் பட்டரையில் வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு ராணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை மானபங்கம் செய்துள்ளார்.
இது பற்றி பெங்களூரில் தனது கணவருக்கு ரோஜா தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்.
இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications