பொடா அமல்படுத்தும் திட்டமில்லை- மன்மோகன்

ஜெய்ப்பூரில் நேற்று முன் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 80 பேர் பலியாயினர். சம்பவ இடத்தை பார்வையிட்ட பாஜ மூத்த தலைவர் அத்வானி கூறுகையில், தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு பொறுப்பற்ற வகையிலும், மெத்தனமாகவும் செயல்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. ஓட்டு வங்கிக்காக பொடா சட்டத்தை இந்த அரசு ரத்து செய்தது.
4 ஆண்டுகளாக இந்த அரசு ஆட்சியில் இருந்ததே தவிர, மகிழ்ச்சியற்ற பதிவுகளைதான் இந்த அரசு செய்துள்ளது.
நாட்டில் பல மாநிலங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்து வருகிறது. இதை தடுக்க பொடா போன்ற கடுமையான சட்டங்கள் அவசியம். எனவே பொடா சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் பல இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதலில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும்வகையில் பிரதமர் மன்மோகன் கூறியதாவது:
பொடா சட்டம் எதை சாதித்து விட்டது? தீவிரவாதத்துக்கு கருணை காட்டும் எந்த சட்டமும் இந்த நாட்டில் இல்லை.
பொடா சட்டத்தின் மூலம் எந்த குண்டு வெடிப்பையும் தடுக்க முடியாது. பொடா சட்டம் அமலில் இருந்தபோதுதான் நாடாளுமன்றத்திலும், அகமதாபாத்தில் உள்ள அக்ஷர்தாம் கோயிலிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
தற்போதைக்கு பொடா சட்டம் அமல் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
தீவிரவாத பிரச்னை குறித்து பாகிஸ்தானுடனான வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியாவின் கருத்து தெரியப்படுத்தப்படும். இருதரப்பு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் அப்போது விவாதிக்கப்படும். என்று கூறினார்.
-
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
திருச்செந்தூர் சென்ற புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.. பேச்சுவார்த்தையில் எஸ்கேப்.. பரிதவிக்கும் பாஜக -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
லட்சிய ஜனநாயக கட்சிக்கு தர்பூசணி சின்னம்.. NDA கூட்டணியில் இடம்பெறுமா? இல்லையா? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
Election Exclusive: விஜய் தனியா நிக்குறாரு..ஏன்? ஏன்னா யாருமே வரலை! பனையூரைச் சுற்றி மர்ம சுவர்! தலைகளின் தகிடு தத்தோம்!












Click it and Unblock the Notifications