பிளஸ்டூ ரேங்க் மாணவர்களுக்கு கருணாநிதி ரொக்க பரிசளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூ பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இன்று ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் முதலிடம் பிடித்த மாணவி தாரணி மற்றும் மாணவர் ராஜேஸ்வரனுக்கு தலா ரூ.15,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.12000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10000 ரொக்கப் பரிசாக தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி இன்று கோட்டையில் வழங்கினார். இது தவிர, முதலிடம் பெற்ற மாணவர்களின் உயர்நிலை கல்விக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்களையும் கருணாநிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications