For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதத்தை எதிர்த்து அணிதிரள ஜெ. அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தீவிரவாதத்தை எதிர்க்க எல்லோரும் ஓரணியில் திரளவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

ஜெய்ப்பூரின் இதயப்பகுதியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 63 பேர் உயிரிழந்தும் 150 பேருக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த சம்பவம் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தலையும் பாதிப்பையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெடிகுண்டு சம்பங்கள் நடத்தப்பட்டு உள்ளன.

நாட்டில் சமாதானத்தைக் குலைக்கும் தீவிரவாத சக்திகளஇன் தந்திர செயல் இது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த அறிவில்லாத கொடூரத்தனமான தாக்குதலை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஓரணியில் திரள ஒருமனதாகத் தீர்மானிக்க வேண்டும்.

இந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறேன்.

காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X