பாஜகவுக்கு அதிக சீட்கள்: 'எக்சிட் போல்'

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் நேற்று நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின் இறுதியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் (எக்சிட் போல்) பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபைக்கு நேற்று 2வது கட்ட தேர்தல் நடந்தது. 66 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. வாக்குப் பதிவின் இறுதியில் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகளை என்டிடிவி வெளியிட்டது.

இதில் பாஜகவுக்கு 32 முதல் 42 இடங்கள் வரை கிடைக்கும் எனத் ெதரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 20 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 8 முதல் 12 இடங்கள் வரையும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு நடந்த எக்சிட் போல் கணிப்பிலும் பாஜகவே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர் பாஜகவுக்கு மொத்தமாக 73 சீட்களும், காங்கிரஸுக்கு 45 சீட்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 42 சீட்களும் கிடைக்கும் என எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

3வது கட்ட வாக்குப் பதிவு 69 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+