கிழக்கு மாகாண முதல்வராக பிள்ளையான் பதவியேற்பு

சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளை ராணுவம் மீட்டது. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த இலங்கை அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி அங்கு தேர்தல் நடந்தது.
இந்தத் தேர்தலில் ராஜபக்சேவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. ஆட்சியைப் பிடித்தால் தமிழர் ஒருவரே முதல்வர் ஆவார் என ராஜபக்சே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதற்கு கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம்களிடையே அதிருப்தி ஏற்பட்டது. இருப்பினும் ஏற்கனவே கூறியபடி தமிழரையே முதல்வராக்கியுள்ளார் ராஜபக்சே.
அதன்படி புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து, தனிக் கட்சி தொடங்கியவரான கருணாவின் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான பிள்ளையான் முதல்வராகியுள்ளார். அவருக்கு நேற்று அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
1987ம் வருடத்திய இந்திய இலங்கை ஒப்பந்தப்படி தனித் தனியாக இருந்து வந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன.
ஆனால் 2006ம் ஆண்டு இந்த இணைப்பு செல்லாது என்று இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இரு மாகாணங்களும் மீண்டும் பிரிக்கப்பட்டன.
இங்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 37 இடங்களில் ஆளும் கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது.
முதல்வராகியுள்ள பிள்ளையான், கருணா மீது அதிருப்தியுடன் இருந்தவர்களின் ஆதரவுடன் அக்கட்சியின் தலைவரானவர். அவர் மீது பெரும்பான்மை தமிழர்களின் பிரதிநிதிகளாக உள்ள தமிழ் எம்.பிக்கள் பல்வேறு புகார்களை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆள் கடத்தல், படுகொலை, சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு பிள்ளையான்தான் காரணம் என்பது முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. அரசு ஆதரவுடன், தமிழ் எம்.பிக்களுக்கு மிரட்டல் விடுப்பது, கடத்துவது உள்ளிட்ட செயல்களை பிள்ளையான் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் பெரும்பான்மை தமிழர்களின் வெறுப்புக்கு ஆளான பிள்ளையான் கிழக்கு மாகாண முதல்வராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications