மதுரை போலீஸ் காவலில் இருந்து தப்பிய கொள்ளையர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு இருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆன்டனி, ஆறுமுகம், கண்ணன் ஆகியோர் மதுரை தானப்பமுதலி தெருவில் ஒருவீட்டில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசிடம் பிடிபட்டனர்.
அவர்கள் தந்த தகவல்பேரில் திருப்பூர் குமார், சென்னை சிவநாயகம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 44 சவரன் தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளி பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட கொள்ளையர்களை திருநகர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிவநாயகம், குமார், கண்ணன் ஆகியோர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஒடிவிட்டனர்.
அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications