For Daily Alerts
Just In
தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது வைகை!!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளாவதில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
திண்டுக்கல் அருகே வெள்ளோடு பகுதியில் உள்ள மொட்டனம்பட்டி ரயில்வேகேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதிகாலை சோதனைக்கு சென்ற ரயில்வே ஊழியர்களால் இவ்விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு இன்று காலை புறப்பட்ட வைகை ரயில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.
இதையடு்தது உடனடியாக ரயில் ஓட்டுனருக்கு தகவல் தரப்பட்டதால் வைகை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தாற்காலிகமாக தண்டவாளம் சரி செய்யப்பட்டது.
சுமார் அரைமணி நேர தாமதத்துக்கு பிறகு வைகை ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது. சேதமடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
Comments
Story first published: Monday, May 26, 2008, 14:06 [IST]