Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களக்காடு-முண்டந்துறை வனப் பகுதியில் மீண்டும் தீ

Subscribe to Oneindia Tamil

விக்கிரமசிங்கபுரம்: புலிகள் சரணாயலமான களக்காடு-முண்டந்துறையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் முக்கிய புலிகள் காப்பகம் களக்காடு-முண்டந்துறை. பல் உயிரினப் பெருக்கம் நடைபெறும் இப்புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 ஏக்கர் பரளப்பளவில் உள்ள புற்களும், மற்றும் சருகுகள் எரிந்து சாம்பலாயின.

இது குறித்து அறிந்த வனத்துறை அமைச்சர் செல்வராஜ் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதோடு, தீ பிடித்ததற்கான காரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந் நிலையி்ல் முண்டந்துறை வனச்சரக பகுதியான பாதர்மலை பீட்டில் மீண்டும் திடிரென தீப்பிடித்தது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியி்ல் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

வனத்துறையினரை பார்த்தவுடன் சிலர் தப்பியோட முயற்சி செய்தனர். அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தீயை வனத்துறையினர் மற்றும் அப்பகுதியின் பழங்குடி காணி இன மக்கள் சேர்ந்து சில மணி நேரங்களிலேயே முற்றிலுமாக அணைத்தனர்.

வனப்பகுதியில் தீப் பிடித்த இடத்தில் இருந்து ஓடிய விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்த 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

முண்டந்துறை வனச் சரகத்தில் வைத்து இவர்களிடம் அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக இணை இயக்குனர் பத்ரசாமி மற்றும் முண்டந்துறை வனச்சரகர் பிள்ளை விநாயகம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டு அதன் தடயம் தெரியாமல் தடுக்கவே அப் பகுதியில் தீயை வைத்தனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+