சிறுமியை நாசப்படுத்திய முதியவர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன் கோவிலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் ராமலிங்கம் என்பவரின் மகள் ஜெயந்தி. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இந்த சிறுமி நகராட்சி பள்ளியில் படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பசுபதி என்ற முதியவர் விசைத்தறி தொழிற்கூடம் நடத்தி வருகிறார். இவரது விசைத்தறி கூடத்தின் அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயந்தியை தனியாக அழைத்து சென்று பசுபதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் தாயார் விசாரித்ததில் தன்னை பசுபதி பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் விசாரணை நடத்தி பசுபதியை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications