கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழி சாலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்கப்படும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல ரூ.1.7 கோடி செலவில் புதிய படகு வாங்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு கொச்சியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 2வது வாரத்தில் இது கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படும். தற்போது இயக்கப்படும் 20 ஆண்டு பழைமையான தாமிரபரணி, பாகீரதி படகுகள் படகுத் துறையிலேயே நிறுத்தப்பட்டு அவசர தேவை ஏற்படும் போது இயக்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகளில் சாலை பராமரிப்புக்கு தமிழக அரசு ரூ.4,690 கோடி செலவிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.4,179 கோடியில் சாலைகள் பராமரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வறிக்கை கிடைக்க பெற்றதும் நான்கு வழி சாலை அமைக்கும் பணி துவங்கும் என்றார்.n.












Click it and Unblock the Notifications