கடையை உடைத்து மது பாட்டில்களை ரோட்டில் வீசிய ரோஜா
ஆந்திராவில், பல கடைகளிலும் மதுபானங்கள் விற்கப்படுவதாக தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவி நடிகை ரோஜா குற்றம் சாட்டி வருகிறார்.
இந் நிலையில் திருப்பதியில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி அவர் போராட்டம் நடத்தினார்.
அப்போது திருப்பதி ஜீவகோனை பகுதியில் ஒரு கடையில் சட்ட விரோதமாக மது பானம் விற்கப்படுவதாக அவருக்கு தகவல் கிடைக்கவே தொண்டர்களுடன் அங்கு சென்றார்.
ரோஜா வருவதை அறிந்து அந்தக் கடை பூட்டப்பட்டது. ஆனால், அந்தக் கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்த ரோஜா உள்ளே நுழைந்து அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பானங்களை ரோட்டில் வீசி உடைத்தார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து ரோஜாவை போலீசார் கைது செய்தனர்.
அவரை வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல முயன்றபோது தொண்டர்கள் வேன் முன்பு படுத்துக் தடுத்தனர்.
போலீசார் தொண்டர்களை அப்புறப்படுத்தி விட்டு ரோஜாவை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை எச்சரித்துவிட்டு சிறிது நேரத்தில் விடுவித்துவிட்டனர்.
இதையடுத்து திருப்பதி கலால்துறை அலுவலகம் சென்ற ரோஜா அங்கு தொண்டர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கடைகளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பதை தடை செய்ய வேண்டும் என்று கோஷமிட்டுவிட்டு சென்றார்.













Click it and Unblock the Notifications