யு.எஸ். பெண் கற்பழிப்பு வழக்கில் திருப்பம்-கற்பழிக்கப்படவில்லை
சென்னை: கற்பழிக்கப்பட்டதாக சர்ச்சைக்குள்ளான அமெரிக்க பெண் வழக்கில், அவர் கற்பழிக்கப்படவில்லை என்று மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருபவர் கெல்லி பேக்கர். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவரது கணவரும் அமெரிக்கரே. கெல்லி, ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் பேக்கர், சாப்ட்வேர் என்ஜீனியர் ஆவார்.
கடந்த மாதம் 24ம் தேதி கணவரும், மனைவியுமாக மது அருந்த ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்றனர். பாதியிலேயே பேக்கர் வீடு திரும்பி விட்டார். ஆனால் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார் கெல்லி.
இந்த நிலையில் அடுத்த நாள் அதிகாலையில் அவர் அண்ணா நகரில் பிளாட்பாரத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை இரு பிபிஓ ஊழியர்கள் மீட்டு வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.
இதையடுத்து கெல்லி போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னுடன இருவர் மது அருந்தியதாகவும், அவர்கள்தான் தன்னை கடத்திச் சென்று கற்பழித்திருக்க வேண்டும் எனவும், அவர்கள் தனது செல்போன், கைப்பை ஆகியவற்றை திருடியிருக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜோஸ் மாத்யூ, ஷாஜி ஜான் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவருக்கும் ஆண்மைப் பரிசோதனை நடத்தப்பட்டது. கெல்லிக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த மருத்துவப் பரிசோதனையில் கெல்லி கற்பழிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இருப்பினும் கெல்லியை வைத்து ஆபாசப் படம் எதுவும் எடுக்கப்பட்டிருக்கலாமோ என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதையடுத்து போலீஸ் தரப்பில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஜோஸ் மற்றும் ஷாஜியை காவலில் வைத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதி கலைப் பொன்னி, இருவரையும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications