நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: ராஜேந்தர்
சென்னை: தமிழக அரசியலில் நடக்கும் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி யிலிருந்து வெளியேற்றுவதும், பின்னர் சேர்த்து கொள்வதும் முதல்வரின் வாடிக்கை. இதில் எந்த புதுமையும் இல்லை. இதனால் அரசியல் திருப்பம் ஏதும் ஏற்படாது. பொது மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் லதிமுக இடம் பெறுமா என்ற கேள்விக்கு இப்போது பதில் சொல்ல முடியாது. தேர்தல் சமயத்தில்தான் முடிவு தெரியும். நல்ல கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2 மாதங்களில் 15 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளோம்.
சனிக்கிழமை புதுக்கோட்டையில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மீட்பு விளக்கக் பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து அரியலூர், திருப்பூர், கோவை, தேனி, மேலூர், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, நாமக்கல், ராமநாதபுரம், தேவக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டம் உள்பட 18 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உள்ளேன்.
நாளை துவங்கும் இந்த சுற்றுப் பயணம் வரும் ஆகஸ்ட் மாதம் 16ந் தேதி வரை 2 மாத காலத்துக்கு நீடிக்கிறது என்றார் ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications