திருச்சி- சென்னைக்கு பாரமவுண்ட் விமான சேவை
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் திருச்சி - சென்னை இடையே ஜூன் 30ம் தேதி முதல் தினசரி விமான சேவையை தொடங்கவுள்ளது.
சென்னையிலிருந்து காலை 9.45 மணிக்குக் கிளம்பி 10.20 மணிக்கு வந்தடையும். மறு மார்க்கத்தில், 10.45 மணிக்குக் கிளம்பி, சென்னையை 11.20 மணிக்கு சென்றடையும்.
தற்போது திருச்சியிலிருந்து, சென்னைக்கு காலை நேர விமான வசதி இல்லை. அந்தக்குறையை பாரமவுண்ட்டின் புதிய சேவை போக்குவதாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications