அந்தமானில் தொடர்ந்து நிலநடுக்கம் - இன்றும் அதிர்ந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அந்தமானில் இன்று அதிகாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் கடந்த 2 நாட்களாகஅடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. 5 முதல் 6.7 வரையிலான ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது. காலை 6.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications