டிவி அலுவலகத்தில் சிக்கிய மான்யதாவின் முதல் கணவர்!

மான்யதாவின் முதல் கணவர் மீராஜ் உர் ரஹ்மான். இவரை விட்டுப் பிரிந்த பின்னர் நடிகர் சஞ்சய் தத்தை காதலித்து வந்தார் மான்யதா. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவாவில் கல்யாணமும் செய்து கொண்டனர்.
மீராஜ் உர் ரஹ்மான் நடிகைகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியது, மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை இன்னொரு வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீஸார் சமீபத்தில் தங்களது கஸ்டடியில் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் மும்பையில் ஹைதராபாத் போலீஸாரின் பொறுப்பில், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்தார் ரஹ்மான். அப்போது போலீஸாரை ஏமாற்றி விட்டுத் தப்பினார்.
இதையடுத்து மும்பை போலீஸாரை, ஹைதராபாத் போலீஸார் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்து ரஹ்மானை தேடும் பணியை மும்பை போலீஸார் முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில், தப்பி ஓடிய ரஹ்மான், மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு தனியார் டிவி சேனல் அலுவலகத்திற்குப் போனார். இத்தகவல் போலீஸாருக்குத் தெரிய வரஅங்கு விரைந்த போலீஸார் ரஹ்மானைக் கைது செய்தனர்.
மான்யதாவின் முதல் கணவர் தப்பி ஓடி பிடிபட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications