மணல் லாரிகளால் தொடரும் பலிகள்

Subscribe to Oneindia Tamil

கடையம்: மணல் லாரிகளின் அதிரடிப் போக்குவரத்தால் கடையம் வட்டாரத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 9 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

கடையம் வட்டாரத்தில் கடையம், முதலியார்பட்டி, தி்ருமலையப்புரம், பொட்டல்புதூர் வழியாக, மணல் எடுக்க லாரிகள் மிக வேகமாக வருவது வாடிக்கையாகிவிட்டது. மணல் லோடுகளுடன் செல்லும் லாரிகளை விட மணல் எடுக்க வரும் லாரிகள்தான் மிக வேகமாக வருகிறது.

மேலும் இப்பகுதி சாலைகளை சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடையம் பகுதி மக்கள் ரோட்டில் செல்லவே பயந்து வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வேகமாக வரும் லாரிகளையும், மணல் அள்ளிவிட்டு செல்லும் லாரிகளையும் போலீசார் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த அலட்சியம்தான் பலரது உயிரைக் குடித்து வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மணல் லாரிகளால் விபத்து ஏற்படுவதும் உயிர்ச்சேதம் நிகழ்வதும் வாடிக்கையாகி வருகிறது.

கடந்த வாரம் 25ம் தேதி மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கேரளாவில் இருந்து மணல் எடுக்க வந்த லாரி மோதியதில் இருவருமே சம்பவ இடத்தில் பலியாகினர்.

அதேபோல நேற்றும் மணல் எடுக்க வந்த லாரி மோதி கூலி தொழிலாளி ஒருவர் பலியானார்.

இதே போல மேலும் 6 பேர் வெவ்வேறு இடங்களில் மணல் லாரிகளில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+