ராமேஸ்வரத்தில் 13ம் தேதி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வரும் 13 -ம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் தேமுதிக சார்பில் நடைபெறும் ஆர்பாட்டத்தில் அக் கட்சி தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.
இது குறித்து தேமுதிக சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஜின்னா கூறுகையில், இலங்கை கடற்படை தாக்குதலால் 1983 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மீனவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்வதால் மீனவர்கள் கடும் அவஸ்தை பட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களின் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும். இதற்காக தேமுதிக சார்பில் கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 13 ம் தேதி அன்று ராமேஸ்வம் வருகிறார்.
ராமேஸ்வரம் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு மீன்துறை உதவி இயக்குனர் அலுவலம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றார் அவர்.