காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை கூடி விவாதம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ஜூலை 11ம் தேதி கூடுகிறது. கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறர் என்றார்.
காரியக் கமிட்டி உறுப்பினராக உள்ள பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தம், நம்பிக்கை வாக்கு, ஆதரவுக் கட்சிகளை திரட்டுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைத்து ஆட்சியைக் காப்பாற்றுவது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications