தீவிரவாதிகளுடன் ஆர்காடு வீராசாமிக்கு தொடர்பு-ராமதாஸ்

பாமக மகளிர் மது ஓழிப்பு மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 1967க்குப் பின் திமுக மற்றும் அதிமுக தலைமையில்தான் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. இந்த நிலையை மாற்றி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை சந்தித்து ஆலோசனை கூறியுள்ளேன்.
குரு மீது குற்றச்சாட்டு கூறியவர்கள் புகாரை மறுத்து கருத்து தெரிவித்துள்ளனர். 6 மாதங்களுக்கு முந்தைய வழக்குகள் தொடர்பாக டிஐஜி தலைமையில் 3 எஸ்பிக்கள், 500 போலீசாருடன் சென்று குருவை கைது செய்துள்ளனர்.
இதில் இவ்வளவு வேகம் காட்டிய தமிழக அரசு மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 ஊழியர்களை எரித்து கொலை செய்து பஸ்களை அடித்து நொறுக்கியவர்கள் மீது அன்று மாலையே ஜாமீனில் வெளிவரத்தக்க வகையில் சாதாரண வழக்கு பதிவு செய்தது எந்த வகையில் நியாயம். இதை சுட்டிகாட்டினால் அவர்களுக்கு கோபம் வருகிறது.
ஏ.கே மூர்த்தி எம்பி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தமிழக அமைச்சர் ஒருவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. ஆற்காடு வீரசாமிதான்.
இதற்கான ஆதாரங்களை உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிப்போம். திமுக கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற ஆற்காடு வீரசாமியும் உளவுத்துறை அதிகாரி ஜாபர்சேட்டும்தான் காரணம் என்றார் ராம்தாஸ்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications