நெல்லையில் சூடு பறக்கும் வெள்ளரி விற்பனை
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விற்பனை படு சூடாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் டி.கல்லுபட்டி, சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளரி உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டும் கோடை காலத்தில் சூட்டை தணிக்கும் தார்பூசணி பழத்திற்கு ஈடாக வெள்ளரி விற்பனையும் நடந்து வந்த நிலையில் கோடை மழையால் வெள்ளரி தோட்டங்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் கடந்த 2 மாதங்களாக வெள்ளரி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதோடு வேலையின்றி தவித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் வெள்ளரி சாகுபடி செய்தனர். தற்போது நெல்லை மாவட்ட பல பஸ் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
ஒரு வெள்ளரி பிஞ்சு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது குற்றால சீசன் மந்தமான நிலையில் வெயில் அதிகமானதாலும், பொதுமக்கள் மற்றும் குற்றால சீசனுக்கு வரும் பயணிகள் வெள்ளரி பிஞ்சுகளை வாங்கி உடல் சூட்டை தணித்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி மாடசாமி கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெள்ளரி பயிரிட்டு விற்பனை செய்து வந்தோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை மழையால் வெள்ளரி பயிர்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொழிலை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது கடந்த மாதம் சாகுபடி செய்த வெள்ளரி நன்கு விளைந்துள்ளதால் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது என்றார்.
-
மீண்டும் மீண்டுமா? விஜய் பரப்புரையில் தொடரும் விதிமீறல்கள்.. நெல்லையில் மட்டும் 5 விபத்துகள் -
கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்!












Click it and Unblock the Notifications