நெல்லையில் சூடு பறக்கும் வெள்ளரி விற்பனை
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் வெள்ளரிக்காய் விற்பனை படு சூடாக நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் டி.கல்லுபட்டி, சாத்தூர் ஆகிய ஊர்களுக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்ட பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளரி உற்பத்தி, விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டும் கோடை காலத்தில் சூட்டை தணிக்கும் தார்பூசணி பழத்திற்கு ஈடாக வெள்ளரி விற்பனையும் நடந்து வந்த நிலையில் கோடை மழையால் வெள்ளரி தோட்டங்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் கடந்த 2 மாதங்களாக வெள்ளரி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டதோடு வேலையின்றி தவித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் வெள்ளரி சாகுபடி செய்தனர். தற்போது நெல்லை மாவட்ட பல பஸ் நிலையங்களில் 15க்கும் மேற்பட்ட கடைகளில் வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
ஒரு வெள்ளரி பிஞ்சு 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை விற்பனையாகிறது. தற்போது குற்றால சீசன் மந்தமான நிலையில் வெயில் அதிகமானதாலும், பொதுமக்கள் மற்றும் குற்றால சீசனுக்கு வரும் பயணிகள் வெள்ளரி பிஞ்சுகளை வாங்கி உடல் சூட்டை தணித்துக் கொள்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி மாடசாமி கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெள்ளரி பயிரிட்டு விற்பனை செய்து வந்தோம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கோடை மழையால் வெள்ளரி பயிர்கள் தண்ணீரில் முழ்கின. இதனால் நஷ்டம் ஏற்பட்டது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்த தொழிலை நம்பி 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிழைப்பு நடத்தி வந்த நிலையில் தற்போது கடந்த மாதம் சாகுபடி செய்த வெள்ளரி நன்கு விளைந்துள்ளதால் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications