மின் தடை விவகாரம்: தொழிலதிபர்களுடன் கருணாநிதி ஆலோசிக்க முடிவு
சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையைப் போக்குவது குறித்து தொழிலதிபர்களின் கூட்டத்ைத சென்னையில் கூட்டி முதல்வர் கருணாநிதி விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் கருணாநிதி தலைமையில் புதனன்று மாலை அமைச்சரவையின் 29ஆவது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு சம்பந்தமாக நீதியரசர் சண் முகம் அளித்துள்ள விசாரணை அறிக்கை குறித்து அமைச்சர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தொடர்ந்து எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில், இதனை எப்படி சீர் செய்வது என்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இறுதியாக வெள்ளியன்று முக்கிய தொழிலதிபர்களை அழைத்துப் பேசி பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து அறிவிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
ரேஷனில் பருப்பு - பாமாயில் விற்பனை தொடரும்:
சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, ரவை மற்றும் மைதா ஆகிய பொருட்களை குடும்ப அட்டை தாரர்களுக்கு மானிய விலையில் தொடர்ந்து வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டு, இத்திட்டத்தை மேலும் ஓராண்டு காலத்திற்கு தொடருவது என்றும் முடி வெடுக்கப்பட்டது.
அரசாணை நிலை எண். 161, வணிக வரித்துறை, நாள் 13.10.2000ல் டைடல் பூங்கா வில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களுக்கு எழுதிக்கொடுக்கப்படும் விற்பனை மற்றும் குத்தகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை விலக்களித்து வெளியிடப்பட்ட அறிவிக்கை; பிரிக்கப்படாத அடி மனைக்கும் பொருந்தும் பொருட்டு தக்க திருத்தம் செய்யலாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது.
இந்தியத் தொழில் நுட்ப ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கு சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனத் திற்கு (ஐஐடி, சென்னை) வழங்கப்பட்ட 11.42 ஏக்கர் நிலத்திற்கு பத்தாண்டுகளுக்கு ஆண்டுக் குத்தகையாக ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்வதென்றும், பத்தாண்டுகளுக்குப் பிறகு பெறப்படும் மொத்தக் குத்தகையில் இரண்டு சத விகிதம் ஆண்டுக் குத்தகையாக நிர்ணயிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு மலைப் பகுதி கள் சட்டம், 1955 மற்றும் தமிழ்நாடு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம், 1949 இல் உள்ள விதி 2-ஏக்கு திருத்தம் வெளியிட எடுக்கப்படும் நடவடிக்கை யினை கைவிடலாம் என்றும், ஏற்கனவே நிலவி வரும் நிலையினைத் தொடர்ந்து நீடிக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவு செய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--












Click it and Unblock the Notifications