சிபு சோரன், அஜீத் சிங்குக்கு நாளை அமைச்சர் பதவி?

அரசுக்கு ஆதரவான வாக்குகளை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சி, சிறு கட்சிகளை தற்போது இழுக்க ஆரம்பித்துள்ளது. அன் பலனாக அஜீத் சிங் மற்றும் சிபு சோரன் ஆகியோர் காங்கிரஸ் வலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருவரையும் மத்திய அமைச்சர்களாக்க காங்கிரஸ் கட்சி சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. சிபு சோரனுக்கு நிலக்கரித்துறையும், அஜீத் சிங்குக்கு உணவுத்துறையும் வழங்கப்படக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
சிபுசோரன் முன்பு நிலக்கரித்துறையைத்தான் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரையும் அமைச்சர்களாக்குவதற்காக நாளை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் பலமாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அப்படி எந்தத்திட்டமும் இல்ைல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை, அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்ததாக வெளியான செய்தியையும் அது மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications