இரவில் பல் துலக்குதல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: இரவில் பல் துலக்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 200 பள்ளிகளில் அது குறித்த பிரசாரத் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் லீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பற்களை பேணுவது, வாயை சுத்தமாக வைத்திருப்பது, இரவில் பல் துலக்குவது போன்ற பற்களை பராமரிக்கும் பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்துஸ்தான் லீவர் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது பற்றி பெப்ஸோடென்ட் மேலாளர் விக்ரம் ஜித் சிங் கூறியதாவது: இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு இரவில் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 200 பள்ளிகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications