சென்னை செல்போன் கடை சூறை - ரூ.15 லட்சம் போன்கள் திருட்டு
சென்னை: சென்னை அருகே தாம்பரத்தில்,செல்போன் கடையை சூறையாடிய மர்ம நபர்கள், அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்களைத் திருடிச் சென்றனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சிவலோகராஜ். இவர் தாம்பரம் சண்முகம் சாலையில் செல்போன் கடை வைத்துள்ளார். இன்று காலை வழக்கம்போல கடையை திறந்தார். அப்போது கடையில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் விலை உயர்ந்த செல்போன்களையும் காணவில்லை.
இதையடுத்து போலீசில் சிவலோகராஜ் புகார் செய்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்து சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். 150 செல்போன்கள் திருட்டுப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.
கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவில் கடையின் பின்புற சுவரை துளையிட்டு கடைக்குள் நுழைந்துள்ளனர். திருட்டு நடந்த கடை போலீஸ் நிலையத்துக்கு 100 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் பகுதியின் முக்கிய வணிக மையமான சண்முகம் சாலை எப்போதும் கூட்ட நெரிசல் மிக்க இடம்என்பதால் இந்தக் கொள்ளை போலீஸாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications