பரஸ்பரம் குதிரைபேர புகார்-அவையில் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: பிரதமரின் அலுவலகம் எம்பிக்களை விலைக்கு வாங்கும் அலுவலகமாக மாறிவிட்டதாக பாஜக மக்களவையில் குற்றம்சாட்டியது.
அதே நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க பாஜக தங்களுக்கு பணம் தர முன் வந்ததாக ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பிக்களான பப்பு யாதவ், சையத் சகாபுதீன் இருவரும் குற்றம் சாட்டினர். இந்த இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பாஜக-ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் எம்பிக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பெரும் அமளி ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
முன்னதாக பாஜக எம்பியான மல்ஹோத்ரா பேசுகையில்,
எம்பிக்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற காங்கிரஸ் முயல்கிறது. குறிப்பாக பிரதமரின் அலுவலகமே குதிரை பேரம் பேசும் அலுவலகமாக மாறிவிட்டது என்றார்.
இதற்கு காங்கிரஸ் கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெல்லப் போவதும், தங்களுக்கு தோல்வி கிடைக்கப் போவதும் உறுதியாகிவிட்டதால் பாஜக இது போன்ற குற்றச்சாட்டைக் கூறி தப்ப முயல்வதாக காங்கிரஸ் எம்பிக்கள் கூறினர்.
அப்போது எழுந்த ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பிக்களான பப்பு யாதவ், சையத் சகாபுதீன் இருவரும், பாஜக என்ன ஒழுங்கான கட்சியா?. காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களிக்க பாஜக தங்களுக்கு பணம் தர முன் வந்தது. இதனால் நேர்மை, நியாயம் பற்றி நீங்கள் பேசக் கூடாது என மல்ஹோத்ராவை நோக்கிப் பேசினர்.
இதையடுத்து பாஜக-காங்கிரஸ், ஆர்ஜேடி எம்பிக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அவையில் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.
10 நிமிடங்களுக்குப் பின் மீண்டும் அவை கூடி விவாதம் தொடர்ந்தது.
காங். பணம் தர முயன்றது-பிஜேடி எம்பி:
இதற்கிடையே அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு பணம் தர சிலர் முன் வந்ததாக ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பிஜூ ஜனதா தள எம்பியான அர்ச்சனா நாயக் கூறியுள்ளார்.
இந்தக் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications