காங்-பாஜக சதி கூட்டணி- மாயாவதி புகார்
டெல்லி: நான் பிரதமராக வரக் கூடாது என்பதற்காக, காங்கிரஸ் கூட்டணி அரசு வெல்ல பாஜக துணை போயிருக்கிறது என உ.பி. முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு அபார வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்புக்கு வராமல் இருந்ததாலும், சிலர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாலும், அரசின் வெற்றி சாத்தியமானது.
வாக்கெடுப்புக்கு முன்பே, மாயாவதியின் செல்வாக்கு பெருகி விடக் கூடாது என்பதற்காக அரசு கவிழ்வதை பாஜக விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன. அக்கட்சியின் எம்.பிக்கள் சிலர் நடுநிலை வகிக்கலாம் என்றும் கூறப்பட்டது. நேற்று அதேபோலவே நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பின்னர் மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது கொள்கைகளால் வெற்றி பெறவில்லை. இந்த வெற்றி பகுஜன் சமாஜ் கட்சியை தடுக்க வேண்டும் மற்றும் தலித் பிரதமராவதை தடுக்க வேண்டும் எனும் கூட்டு சதியால் ஏற்பட்டதாகும்.
தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை இணைந்து இந்த சதித் திட்டத்தை தீட்டின. அத்வானி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பிராந்திய கட்சிகளின் வளர்ச்சி பற்றி கவலை தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்காக இந்த இரு கட்சிகளும் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கின்றன என்றார் அவர்.
இந் நிலையில் இன்று இடதுசாரிகள், மாயாவதி, மற்றும் மூன்றாவது அணியின் தலைவர்கள் டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவுள்ளனர்.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications