ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு-குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: பஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாயினர். தற்போது பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பட்டமாலு பஸ் நிலையம் வழக்கம்போல இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது மேலும் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பொதுமக்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்த டிஐஜி இதுகுறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+