ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு-குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: பஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாயினர். தற்போது பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பட்டமாலு பஸ் நிலையம் வழக்கம்போல இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது மேலும் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பொதுமக்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த டிஐஜி இதுகுறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications